பிரணாப் முகர்ஜி புகைப் படத்திற்கு மலர் வளையம் வைத்து குடியரசுத் தலைவர், பிரதமர் அஞ்சலி!
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் புகைப்படத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, டெல்லியில் உள்ள இராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில் கடந்த 10ஆம் திகதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
மூளையில் கட்டியை அகற்ற சத்திரசிகிச்சை செய்ததை தொடர்ந்து, அவர் கோமா நிலையை அடைந்தார். அவருக்கு கொரோனா பாதிப்பும், நுரையீரல் தொற்றும், சிறுநீரக கோளாறும் கண்டறியப்பட்டது.
இதற்கிடையே, டெல்லி இராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி காலமானார்.
பிரணாப் முகர்ஜி மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மறைவுக்கு அரசு சார்பில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இன்று காலை டெல்லி ராஜாஜி மார்க்கில் உள்ள பிரணாப் முகர்ஜி இல்லத்தில், அவரது புகைப்படத்திற்கு மலர் வளையம் வைத்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.