Main Menu

பாதுகாப்பு தரப்பினரை கௌரவிக்கும் நிகழ்வு இன்று

யுத்தத்தில் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட பாதுகாப்பு தரப்பினரை கௌரவிக்கும் இராணுவ நிகழ்வு இன்று இடம்பெறவுள்ளது. சிறி ஜயவர்தனபுர கோட்டையில் உள்ள நாடாளுமன்ற மைதானத்தில் மாலை 4 மணிக்கு ஜனாதிபதியின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை, நாட்டுக்காக உயர்நீத்த முப்படையினர், காவற்துறை மற்றும் சிவில் பாதுகாப்பு படையினரை சேர்ந்தோருக்கு அஞ்சலி செத்துவதற்காக, இரவு 7 மணிக்கு வீடுகளில் விளக்கேற்றுமாறு கோரப்பட்டுள்ளது.


பாதுகாப்பு அமைச்சு பொதுமக்களிடம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது.


இதற்கிடையில் தேசிய இராணுவ தினத்துக்கு சமாந்தரமாக, இராணுவ சிரேஷ்ட நிலை அதிகாரிகள் 38 பேருக்கு ஜனாதிபதியால் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

பகிரவும்...