Main Menu

பாடிவரும் மேகம் – 22/01/2020

கடந்த புதன்கிழமை 22/01/2020 அன்று நியூ ரூபி நகை மாடத்தின் ஆதரவில் நடைபெற்ற பாடிவரும் மேகம் நிகழ்ச்சியில், முதல் சுற்றுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 5 பாடகர்கள் இணைந்து கொண்டு பாடல்களை வழங்கியிருந்தார்கள். அதனைத்தொடர்ந்து 34 நேயர்கள் தமது இரசனைப்படி ஒவ்வொரு பாடகர்களுக்கும் புள்ளிகளை வழங்கியிருந்தார்கள். இதில் மூன்று நேயர்களது புள்ளிகள் அறிவிப்பாளரால் நிராகரிக்கப்பட்டது.
(காரணம்: நிர்மலா அவர்கள் முழுமையான புள்ளிகளை வழங்கவில்லை.மற்றும் புஸ்பன் அவர்கள் இருவருக்கு மட்டும் புள்ளிகளை வழங்கினார். எனவே நிராகரிக்கப்பட்டது.
இராஜ கோபால் அவர்கள் முழுமையான புள்ளிகளை வழங்கினாலும் இறுதியில் தனது புள்ளிகளில் தவறென கூறி மீளப்பெற்றார்) அதன் அடிப்படையில்,

திரு.இராஜலிங்கம் அவர்கள் 123 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தையும்
திருமதி.நேசன் அவர்கள் 117 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தையும்
திருமதி .கமலவேணி நவரட்ணராஜா அவர்கள் 113 புள்ளிகளை பெற்று மூன்றாம் இடத்தையும்
திரு.தர்ஷன் அவர்கள் 59 புள்ளிகளைப் பெற்று நான்காம் இடத்தையும்
திரு.புங்கையூர் ராஜா அவர்கள் 53 புள்ளிகளைப் பெற்று ஐந்தாம் இடத்தையும் பெற்றனர்.

அனைத்து பாடகர் பாடகிகளுக்கும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் நியூ ரூபி நகை மாடத்தின் சார்பிலும் தமிழ் ஒலி வானொலி சார்பிலும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இதேவேளை இறுதிப்போட்டிக்கு தெரிவான செல்வி.வாசகி இராகவன் அவர்கள் தவிர்க்க முடியாத காரணத்தால் நிகழ்ச்சியில் இணைந்து கொள்ள முடியாமல் போனதையிட்டு மனம் வருந்தி அவருக்கான விசேட பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்நிகழ்ச்சிக்கு அனுசரணை வழங்கிய நியூ ரூபி நகை மாடத்தினருக்கும் ஆர்வத்தோடு புள்ளிகளை வழங்கிய அன்பு நேயர்களுக்கும் எமது இதயபூர்வமான நன்றிகள்.

நேயர்களின் கவனத்திற்கு :
வழங்கப்பட்ட புள்ளிகள் தொடர்பில் அறிவிப்பாளர் கணிப்பின் படி சில பாடகர்களின் கூட்டுத்தொகையில் சிறு தவறுகள் உண்டு. அவரது பணிச்சுமை காரணமாக அத் தவறு நிகழ்ந்திருக்க கூடும். எது எவ்வாறெனினும் தர வரிசைப் படுத்தியதில் எதுவித தவறுகளும் இல்லை என்பதால் நேயர்கள் அதனை பொறுத்தருள வேண்டுமென்று தயவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

“அனைவருக்கும் நன்றி”

பகிரவும்...