Main Menu

பலத்த பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்படும் சோம்ப்ஸ்-எலிசே

இன்று வியாழக்கிழமை மாலை முதல் சோம்ப்ஸ்-எலிசே (Champs-Elysées) பகுதி பலத்த பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்படுகின்றது.

வருட இறுதியில் களைகட்டும் இந்த சோம்ப்ஸ்-எலிசே, வரும் ஞாயிறு முதல் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கால கொண்டாட்டத்துக்கு தயாராகின்றது. அத்தோடு பாதுகாப்பும் பலப்படுத்தப்படுகின்றதாக நேற்று புதன்கிழமை காவல்துறை தலைமையதிகாரி தெரிவித்தார்.

அதன்படி, இன்று நவம்பர் 18, வியாழக்கிழமை மாலை முதல் சோம்ப்ஸ்-எலிசே பகுதியில் மேலதிக சிறப்பு காவல்துறையினர் குவிக்கப்பட்டு குற்றங்கள் கண்காணிக்கப்படும் என தெரிவித்தார். ‘அநாகரிகங்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்!’ என அதிகாரி Didier Lallement தெரிவித்தார்.

இரவு 10 மணியில் இருந்து காலை 6 மணிவரை மின்சார ஸ்கூட்டர்கள் சோம்ப்ஸ்-எலிசேயில் பயணிக்க தற்காலிக தடையும் விதிக்கப்பட்டுள்ளது.  

பகிரவும்...