பரிசில் இடம்பெற்ற கோர விபத்த – ஏழு பேர் வரை படுகாயம்
பரிசில் இன்று இடம்பெற்ற கோர விபத்தில் ஏழு பேர் வரை படுகாயமடைந்துள்ளனர்.
விபத்து பரிஸ் 4 ஆம் வட்டாரத்தில் Place de la Bastille அருகே இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் குறைந்தது நான்கு மகிழுந்துகள் ஈடுபட்டுள்ளன. ஒன்றுடன் ஒன்று நேரடியாக மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இதில் ஏழு பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்த அனைவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் மூவர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு படையினர் மூலம் அறிய முடிகிறது.