Main Menu

பயங்கரவாத தடுப்பு பிரிவு தமிழ் தேசிய மக்கள் முன்னணி முக்கியஸ்தரிடம் விசாரணை!

பயங்கரவாத தடுப்பு பிரிவினர், தமிழ் தேசிய மக்கள் விடுதலை முன்னணியின் வவுனியா மாவட்ட முக்கியஸ்தரும் வன்னி தேர்தல் தொகுதி முன்னாள் வேட்பாளருமான எஸ்.தவபாலனிடம் இன்று (திங்கட்கிழமை) விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

முள்ளிவாய்க்கால் நினைவு தின ஏற்பாடுகள், வெளிநாட்டு தொடர்புகள், அவரது குடும்ப உறுப்பினர்களது விபரம், பல்கலைக்கழகத்தில் செயற்பட்ட விதம் ஆகியவை தொடர்பாக அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விசாரணை சுமார் ஒரு மணி நேரம் இடம்பெற்றுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை எஸ்.தவபாலன், பல்வேறு சமூக சேவைகள் மற்றும் தமிழர் நலன்சார் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...