Main Menu

னா மற்றும் ரஷ்ய தூதுவர்களுக்கு வெளியுறவு அமைச்சர் நன்றி தெரிவிப்பு

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில், இலங்கைக்கு  அளித்த ஆதரவுக்கு, சீனா மற்றும் ரஷ்யாவுக்கு வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன நன்றி தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் யூரி மெட்டிரி மற்றும் இலங்கைக்கான சீனத் தூதுவர் சி ஜென்ஹோங் ஆகியோரை வெளிவிவகார அமைச்சகத்தில் சந்தித்த தினேஷ் குணவர்தன, இவ்வாறு  இருநாடுகளும் இலங்கைக்கு வழங்கிய ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார்.

மேலும், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்துவதற்கு உதவியதற்காகவும் சீனா மற்றும் ரஷ்ய அரசாங்கங்களுக்கு இலங்கை அரசு சார்பாக அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

இதேவேளை  ஜெனீவாவிலுள்ள ஐ.நா.மனித உரிமைகள் பேரவைக்கு இலங்கை அளித்த ஆதரவு குறித்தும் தினேஷ் குணவர்தன திருப்தி தெரிவித்தார்.

குறித்த இரு நாட்டு தூதர்களையும் தனித்தனியாக சந்தித்த தினேஷ் குணவர்தன, இலங்கையின் நட்பு உறவுகள் மற்றும் சீனா மற்றும் ரஷ்யாவுடனான இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து நீண்ட விவாதங்களை மேற்கொண்டார் என தெரிவிக்கப்படுகின்றது.

பகிரவும்...