Main Menu

நாளை கடமைகளை பொறுப்பேற்கிறார் ஜனாதிபதி கோத்தாபய

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 7 ஆவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ஷ இன்று பதவிப் பிரமாணம் செய்து கொண்ட நிலையில் நாளை தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.

இன்று காலை அனுராதபுரம் ருவன்வெலிசாயவில்  கோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதியின் செயலாளர் உதய செனவிரத்ன மற்றும் பிரதம  நீதியரசர்  முன்னிலையில் ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ நாளை தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.

அத்தோடு  ஜனாதிபதி  செயலாளராக முன்னாள் திறைசேரி செயலாளர்  பி.பீ. ஜயசுந்தர நியமிக்கப்படவுள்ளார்.  

இதனிடையே  புதிய பாதுகாப்பு செயலாளர் ஒருவரை நியமிக்கவும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார். அதன்படி, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு  மிக நெருக்கமானவர் என கருதப்படும், இறுதிக் கட்ட யுத்ததின் போது முக்கிய பங்கு வகித்த ஒருவரான மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன புதிய பாதுகாப்பு செயலாளராக நியமிக்கப்படவுள்ளார்.

பகிரவும்...