Main Menu

நான்கு வயது சிறுவன் பத்தாவது தளத்தில் இருந்து விழுந்து பலி

நான்கு வயது சிறுவன் ஒருவன் கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளான்.  இச்சம்பவம் கடந்த சனிக்கிழமை Creil, (Oise) இல் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தின் போது குறித்த நான்கு வயது சிறுவன் மாத்திரம் தனியே இருந்ததாக அறிய முடிகிறது. சிறுவன் வசிக்கும் கட்டிடத்தின் பத்தாவது தளத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளான். அவரது தாய் கைது செய்யப்படவில்லை. அவரிடம் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளில், முதல் நாள் இரவு சிறுவன் தூங்கவில்லை எனவும், அவனுக்காக உணவும் மருந்தும் வாங்குவதற்காக கடைக்குச் சென்றிருந்த
தா கவும் அதன் போதே இந்த விபரீதம் இடம்பெற்றதாகவும் தெரிவித்தார்.  அதேவேளை, இது போன்ற அசாதாரண சம்பவங்கள் இடம்பெறக்கூடாது என முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டுவிட்டுச் சென்றதாகவும் தாயார் குறிப்பிட்டிருந்தார். இச்சம்பவத்தில் குற்றவியல் தடயங்கள் எதுவும் இல்லாததால் சிறுவனின் தாயார் கைதுசெய்யப்படவில்லை என Creil வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பகிரவும்...