Main Menu

நாடாளுமன்றத்திற்குள் அமெரிக்கர்கள் வருவதற்கு உதவிய எம்.பி.க்கள் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – ஜே.வி.பி

அமெரிக்க பிரஜை ஒருவருக்கு நாடாளுமன்றதில் சிறப்புரிமைகளை வழங்குவதற்கு பங்களித்த அனைவரும் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஜே.வி.பி. தெரிவித்துள்ளது.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அக்கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க இதனை தெரிவித்தார்.

20 வது திருத்தம், அமெரிக்காவிற்கு பங்குகளை விற்றமை திருகோணமலை எண்ணெய் தொட்டியை இந்தியாவிற்கு வழங்குவதற்கு அரசாங்கத்தில் உள்ள அனைவரும் ஆதரவளித்ததாக அவர் கூறினார்.

நாட்டைப் பாதுகாப்பதற்கும், அரச சொத்துக்களைப் பாதுகாப்பதற்கும் முன்னர், இவற்றுக்கு எல்லாம் ஆதரவளித்த அனைவரும் பொதுமக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் அமெரிக்கர்கள் நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கும் உயர் பதவிகளுக்கு நியமிக்கப்படுவதற்கு வழி வகுத்தவர்கள் இவர்களே என்றும் வசந்த சமரசிங்க குற்றம் சாட்டினார்.

தற்போதய அரசாங்கத்திற்குள் பல பிரச்சினைகள் காணப்படுவதாகவும் இவர்களுக்கு எதிராக பொதுமக்கள் ஒன்று திரண்டு வருவதாகவும் வசந்த சமரசிங்க குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், தமது பதவிகளையும் அரசியல் வாழ்க்கையை பாதுகாப்பதில் மட்டுமே கவனம் செலுத்தும் சிலரின் கருத்துக்களை கேட்டு மக்கள் ஏமாற கூடாது என்றும் அவர் கூறினார்.

பகிரவும்...