Main Menu

நம்பிக்கையில்லாப் பிரேரணை அடுத்த வாரம் சமர்ப்பிக்கப்படும்

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

குறித்த இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையானது தற்போதைய அரசாங்கத்தை ஆதரிக்கும் மற்றும் எதிர்க்கும் தரப்பினரை வெளிப்படுத்தும் என அவர் கூறியுள்ளார்.

எனவே எதிர்வரும் வாரம் நாட்டின் எதிர்காலத்திற்கு மிகவும் தீர்க்கமானதாக அமையும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தி ஒரு இடைக்கால அல்லது சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு ஒருபோதும் ஆதரவளிக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாக இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது போன்ற சூதாட்டத்தில் பங்கேற்க போவதில்லை என்றும் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார்.

பகிரவும்...