Main Menu

நண்பருக்கு அனுப்ப தூக்கில் தொங்குவதுபோல் செல்பி எடுத்த வாலிபர் பலி

தூக்கில் தொங்குவதுபோல் நண்பருக்கு அனுப்ப செல்பி எடுத்த வாலிபர் சேலை இறுக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பதி அடுத்த தானிமேடு காலனியை சேர்நதவர் சிவக்குமார் (25). இவர் தனியார் பைக் ஷோரூமில் மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். இவருடைய பெற்றோர் கரக்கம்பாடி மங்கலத்தில் வசித்து வருகின்றனர். சிவக்குமார் மட்டும் ஹவுஸ் போர்டில் தங்கி வேலைக்கு சென்று வந்தார்.

நேற்று காலை வேலைக்கு சென்ற சிவக்குமார் பிற்பகல் வீட்டிற்கு வந்து மது அருந்தினார். பின்னர் தூக்கு மாட்டி தற்கொலை செய்வதுபோல் செல்பி எடுத்து அவருடைய நண்பர் சிவாவிற்கு அனுப்ப முடிவு செய்தார்.

மின்விசிறியில் சேலையை மாட்டி ஒரு காலை கட்டில் மீதும் இன்னொரு காலை டேபிள் மீதும் வைத்து சேலையை முடிச்சு போட்டு கழுத்தில் மாட்டியுள்ளார்.

பின்னர் செல்பி எடுத்த படத்தை நண்பருக்கு அனுப்பிவிட்டு கீழே இறங்குபோது கால் தவறியது. இதனால் கழுத்தில் மாட்டியிருந்த சேலை இறுக்கியது. இதனால் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

நண்பர் தற்கொலை செய்வதுபோல் வந்த செல்பி படத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிவா, சிவக்குமாருக்கு போன் செய்தார். போன் எடுக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த சிவா சிவக்குமார் வீட்டுக்கு விரைந்து வந்தார். அங்கு சிவக்குமார் தூக்கில் தொங்கிய நிலையில் சேலை இறுக்கி பிணமாக கிடந்தார்.

இதுகுறித்து திருச்சானூர் போலீசாருக்கு சிவா தகவல் அளித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வாலிபரின் பிணத்தை மீட்டு வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பகிரவும்...