Main Menu

தேர்தல் நாளில் அநுராதபுரத்தில் துப்பாக்கிப் பிரயோகம்: ஒருவர் உயிரிழப்பு

அநுராதபுரம்- தஹாயியாகம சந்திப்பில் நடந்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் எஸ்.எப்.லொக்கா என்ற எரோன் ரணசிங்க கொல்லப்பட்டுள்ளார்.

அநுராதபுரத்தில்  கடந்த2015ஆம் ஆண்டு இரவு விடுதி ஒன்றில் வைத்து கராட்டே சாம்பியனான வசந்தசொய்சா கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான எஸ்.எப்.லொக்கா என்பவரே இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் மேலும் இருவர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

பகிரவும்...