Main Menu

தீயிட்டு தற்கொலை செய்ய முயற்சித்த இளம் குடும்ப பெண் படுகாயம்- மட்டக்களப்பில் சம்பவம்

மட்டக்களப்பு- காத்தான்குடி, நொச்சிமுனை பகுதியில் இளம் குடும்ப பெண்ணொருவர் தீயிட்டு தற்கொலை செய்ய முயற்சித்து, அவர் படுகாயமடைந்த  நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இந்த சம்பவத்தில், நொச்சிமுனை- இசை நடனக்கல்லூரி வீதி, முதலாம் குறுக்கு வீதியிலுள்ள 27 வயதுடைய இளம் குடும்ப பெண்ணே படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, குறித்த பெண்ணுக்கும்  அவரது கணவருக்குமிடையே ஏற்பட்ட குடும்பத் தகராறையடுத்து, நேற்று பிற்பகல் 4.15 மணியளவில், அப்பெண், தனக்குத் தானே மண்ணெண்ணைய் ஊற்றி தீயிட்டுக் கொண்டதில் படுகாயமடைந்துள்ளார்.

அதனையடுத்து உடனடியாக அவரை உறவிர்கள் மீட்டு, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பகிரவும்...