Main Menu

தி.மு.க.வை எதிர்க்க திராணி உள்ள ஒரே கட்சி அ.தி.மு.க. தான் – எடப்பாடி பழனிசாமி பேட்டி

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: மற்றவர்களைப் பற்றி பேசி எங்கள் நேரத்தை வீணடிக்க நாங்கள் விரும்பவில்லை. ஒரு சிலரை தவிர யார் வந்தாலும் கட்சியில் சேர்த்துக் கொள்வோம். ஒரு சிலர் யார் என்று உங்களுக்கே தெரியும். தி.மு.க. ஆட்சியை வீட்டிற்கு அனுப்புவோம் என்பதே எங்களது லட்சியம். ஒற்றைத் தலைமை என்று சொல்ல வேண்டாம். நான் எப்போதும் சாதாரண தொண்டன் தான். தி.மு.க.வை எதிர்க்க திராணி உள்ள ஒரே கட்சி அதிமுக தான். இனி பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக செயல்படும். எதிர்க்கட்சி தலைவர் விவகாரம் குறித்து மீண்டும் சபாநாயகரிடம் முறையிடுவோம். தமிழகத்தில் பா.ஜ.க. உடன் கூட்டணி உள்ளது. கர்நாடகத்தில் எங்கள் அடையாளத்தை காட்ட ஒரு தொகுதியில் போட்டியிடுகிறோம் என தெரிவித்தார்.

பகிரவும்...