Main Menu

தி.மு.கவை , அ.தி.மு.க ஆக்கிரமிக்கிறது – ஜெயக்குமார்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்போல தி.மு.கவை அ.தி.மு.க ஆக்கிரமிக்கிறது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “ஸ்டாலின் ஒரு நாள் முதல்வராகவாவது இருக்க வேண்டும் என்று நினைக்கிறார். ஆனால் அது நடக்காது.

தங்க தமிழ்செல்வனுக்கு பதவி கொடுத்திருப்பது தி.மு.க.வில் உள்ளவர்களுக்கு வருத்தம் இருக்கிறது.  அந்த கட்சிக்காக உழைத்தவர்கள் இருக்கின்றபோது அ.தி.மு.க.வில் இருந்து வருபவர்களுக்கு பதவி கொடுக்கிறார்கள் என்ற ஆதங்கம் ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல தி.மு.க.வை அ.தி.மு.க. ஆக்கிரமிக்கிறது. தி.மு.க.வில் நிர்வாகிகளுக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளது.
இது மேலும் சங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தி.மு.க.வில் ஜனநாயகம் கிடையாது. அங்கு ஸ்டாலின் சொல்வதுதான் நடக்கிறது.

வருகிற பொதுத்தேர்தலை ஜனநாயக ரீதியாக சந்தித்து மீண்டும் அம்மாவின் ஆட்சியை அமைப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...