Main Menu

தினசரி பாதிப்பு சற்று குறைவு- இந்தியாவில் ஒரே நாளில் 5,664 பேருக்கு கொரோனா

கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,664 பேருக்கு தொற்று உறுதியாகி இருப்பதாக கூறி உள்ளது. நேற்று பாதிப்பு 5,747 ஆக இருந்த நிலையில் இன்று சற்று குறைந்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 45 லட்சத்து 31 ஆயிரத்து 601 ஆக உயர்ந்தது. கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று ஒரேநாளில் 4,555 பேர் நலம் பெற்று வீடு திரும்பினர். இதுவரை குணம் அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 39 லட்சத்து 57 ஆயிரத்து 929 ஆக உயர்ந்தது. தற்போது ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை நேற்றைவிட 1,074 அதிகரித்துள்ளது. அதன்படி 47,922 பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனா பாதிப்பால் கேரளாவில் விடுபட்ட 21 மரணங்கள் உள்பட மேலும் 35 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,28,337 ஆக உயர்ந்துள்ளது.

பகிரவும்...