Main Menu

தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வை விரைந்து பெற்றுக் கொடுப்போம்- செல்வம்

தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை நேரடியாக ஆராய்ந்து  உரிய தீர்வை பெற்றுக்கொடுக்க விரைந்து செயற்படுவோமென முன்னாள் நாடாளுமன்ற  உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

முடிவடைந்துள்ள   நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கு வாக்களித்த மன்னாரிலுள்ள  மக்கள் அனைவருக்கும், செல்வம் அடைக்கலநாதன் நேற்று (வெள்ளிக்கிழமை) நேரடியாக சென்று  நன்றிகளை தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து மக்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த மக்கள் சந்திப்பில் செல்வம் அடைக்கலநாதன் மேலும் கூறியுள்ளதாவது, “தேர்தல் காலங்களில் மட்டுமே மக்களை தேடி வருகின்றார்கள். அதன்பின்  நாடாளுமன்ற உறுப்பினர்கள் வருவது இல்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.

அவ்வாறான ஒரு நிலைமை இனியொருபோதும் ஏற்படாது. தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ கட்சி சார்பில் எங்களுடை பணியாளர்கள் ஒவ்வொறு கிராமங்களிலும் இருப்பார்கள்.

அவர்கள்  ஊடாகவும் எமது வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும்.குறிப்பாக முசலி பிரதேசத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கு இம்முறை கூடிய வாக்குகள் கிடைத்துள்ளது.

அந்தவகையில் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவிலுள்ள மக்களுக்கும் எமது நன்றிகள்.நாங்கள் மக்களை தேடி வந்து பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுப்போம்.

மேலும் ஒவ்வொறு கிராமங்களுக்கும் சென்று மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுவோம்.

மக்கள் எங்களை விமர்சிக்காத வகையில் எமது வேலைத்திட்டங்கள் அமையும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...