Main Menu

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் வருத்தம் தெரிவித்த ஜனாதிபதி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பு பிற்போடப்பட்டமைக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வருத்தம் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு நேற்று (புதன்கிழமை) கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.

ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்த சந்திப்பு பிற்போடப்பட்டமையினால், இடையூறுகள் ஏற்பட்டிருந்தால் அதற்கு தான் வருத்தம் தெரிவிப்பதாக ஜனாதிபதி அதில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ள கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், வெகு விரைவில் சந்திப்பிற்கான திகதியை அறிவிப்பதாக ஜனாதிபதிகு அறிவித்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...