Main Menu

தமிழர் தாயகத்தில் மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்கும் போராட்டம்- தமிழ் கட்சிகள் விசேட கலந்துரையாடல்!

தமிழர் தாயகத்தில் மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்கும் வகையில் அனைத்துத் தரப்புகளும் ஒன்றிணைந்த அவசர கலந்துரையாடல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் இடம்பெற்றது.

மக்கள் பிரதிநிதிகள், சிவில் அமைப்புகள், மதத் தலைவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் என அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணைந்து மக்கள் போராட்டங்களை முன்னெடுப்பது குறித்து கலந்துரையாடலில் பேசப்பட்டது.

அத்துடன், வடக்கு கிழக்கில் தமிழரின் பாரம்பரிய இடங்கள் தொல்பொருள் என்ற பெயரில் அபகரிக்கப்படுதல், காணி சுவீகரிப்புக்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

இதேவேளை, இந்தக் கலந்துரையாடலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...