Main Menu

தன்னிறைவு பெற்ற நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான பண்டிகையாக இந்த ‘பொங்கல்’ பண்டிகை அமையட்டும்-ஜனாதிபதி

தமிழர்கள் கொண்டாடும் உழவர் திருநாளான தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாழ்த்து தெரிவிப்பதில் பெரும் மகிழ்ச்சியடைவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

உணவுப் பாதுகாப்பையும் போஷாக்கையும் உறுதிசெய்து, தன்னிறைவு கொண்ட நாட்டைக் கட்டியெழுப்பும் முயற்சிகளுக்கான அர்த்தமுள்ள சந்தர்ப்பமாக இத்தினம் அமையட்டும் என்றும் கூறியுள்ளார்.

விவசாயத்தை நவீனமயப்படுத்தும் அதேவேளை சர்வதேச சந்தையின் போட்டித் தன்மைக்கேற்ப தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட வினைத்திறனுடனான இலாபகரமான விவசாயத்தை உருவாக்க தனது அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இப்புதிய பொருளாதார மற்றும் சமூக மறுசீரமைப்புத் திட்டத்திற்கு பங்களிப்பதன் மூலம் பொருளாதாரச் செழிப்புடைய நாட்டைக் கட்டியெழுப்ப அனைத்து இலங்கையர்களும் இந்த தைப்பொங்கல் தினத்தில் ஒன்றிணைய வேண்டும் என்றும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார்.

இலங்கையிலும் உலகெங்கிலும் வாழும் அனைத்து தமிழர்களும் இத்தைப்பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட வாழ்த்து தெரிவிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பகிரவும்...