Main Menu

ஜனாதிபதியினையும் பிரதமரையும் சந்திக்கின்றார் எஸ்.ஜெய்ஷங்கர்

இந்திய வெளிவிவகார அமைச்சர், எஸ்.ஜெய்ஷங்கர் உத்தியோகபூர்வ விஜயம் ​மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தரவுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்ஷங்கர், இலங்கைக்கு வருகை தருவதற்கு முன்னர் இன்று(புதன்கிழமை) மாலைதீவுகளுக்கு செல்கினார்.

அந்த பயணத்தின் பின்னர் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்ஷங்கர் இலங்கைக்கு வருகை தரவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி ஷப்ரி ஆகியோரை சந்திக்கவுள்ளதுடன் இரு தரப்பு கலந்துரையாடல்களிலும் ஈடுபடவுள்ளார்.

பகிரவும்...