Main Menu

ஜனநாயகம் காப்பாற்றப் பட்டிருக்கிறது: டி.ஜெயக்குமார்

இடைத்தேர்தல் முடிவுகள் மூலம் ஜனநாயகம் காப்பாற்றப்பட்டிருக்கிறது என்று மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

விக்கிரவாண்டி மற்றும் நான்குநேரி தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (வியாழக்கிழமை) நடைபெற்று வருகிறது.

இரண்டு தொகுதிகளிலும் அ.தி.மு.க வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனார்.

இந்த நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் ஜெயக்குமார் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில், ”இடைத்தேர்தலில் அ.தி.மு.க மகத்தான வெற்றி பெற்றுள்ளது. இந்த இடைத்தேர்தல் வெற்றியைப் பார்க்கும் போது 2021ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலிலும் அ.த.pமு.கவே வெற்றி பெறும் என்று நன்றாகவே தெரிகிறது. இடைத்தேர்தல் வெற்றியுடன் உள்ளாட்சித் தேர்தலை சந்திப்போம்” எனக் கூறினார்.

பகிரவும்...