Main Menu

சீ.வீ.கே.சிவஞானத்தை சந்தித்தனர் ஐ.நா. பிரதிநிதிகள்!

ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் இலங்கைக்கான பிரதிநிதி அடங்கிய குழுவினருக்கும் வடக்கு மாகாணசபை அவைத் தலைவருக்குமிடையில் விசேட சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு, யாழ்ப்பாணம் கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபை பேரவை செயலகக் கட்டடத் தொகுதியில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்றது.

குறித்த சந்திப்பின்போது போரின் பின்னர் வடக்கு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் ஆட்சி மாற்றத்தின் பின் வடக்கு நிலைமை போன்ற பல்வேறுபட்ட விடயங்கள் குறித்து ஆராயப்பட்டது.

குறித்த சந்திப்பின்போது இலங்கைக்கான ஐ.நா.வின் அகதிகளுக்கான தூதுவராலயத்தின் இலங்கைக்கான பிரதிநிதி மற்றும் ஐ.நா. அதிகாரிகள் உட்பட மூவர் கலந்துகொண்டிருந்தனர்.

பகிரவும்...