Main Menu

சீரற்ற வானிலையால் பாடசாலைகளுக்கு விடுமுறை!

சீரற்ற வானிலை காரணமாக புதுச்சேரியில் பாடசாலை மாணவர்களுக்கு இரண்டு நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி உள்ளதை அடுத்து, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அரசு மற்றும் தனியார் பாடசாலை, கல்லூரிகளுக்கு இரு தினங்களுக்கு விடுமுறை அளிக்க கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதன்படி தரம் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதுடன், பாடசாலைகளை மீளவும் திறக்கும் திகதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...