Main Menu

சிறைச்சாலையில் புலனாய்வுப் பிரிவை அமைக்க அனுமதி

சிறைச்சாலை கட்டளைச் சட்டத்தின் கீழ் சட்ட கட்டமைப்பு உடனான சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவை அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 

நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரல சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

ஆணையாளர் நாயகத்தின் அதிகார மற்றும் நிர்வாகத்துக்கு உட்பட்டதாக சிறைச்சாலையில் பயனுள்ள நிர்வாகம் மற்றும் ஒழுக்கத்தை முன்னெடுப்பதற்கான வசதிகளை செய்வதற்கென சிறைச்சாலை புலனாய்வு பிரிவொன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

பகிரவும்...