Main Menu

சட்டசபை தேர்தல் : நாம் தமிழர் கட்சியின் முக்கிய அறிவிப்பு!

நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளுக்கான சட்டசபை இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடவுள்ளதாக அக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.

இந்த தேர்தல் குறித்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) தாம்பரத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாகவும் குறித்த ஆலோசனையின் பின்னர் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்.

இதன்படி நாங்குநேரி தொகுதியில் பெண் வேட்பாளரும், விக்கிரவாண்டி தொகுதியில் ஆண் வேட்பாளரும் களமிறக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வெற்றிடமாகவுள்ள நாங்குநேரி, விக்ரவாண்டி ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இந்த தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மற்றும் மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் போட்டியிடவில்லை என அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...