Main Menu

சஜித் தலைமையில் அரசியல் கட்சிகள் திடீர் சந்திப்பு!

தேர்தலை ஒத்திவைக்கும் அரசாங்கத்தின் தன்னிச்சையான நடவடிக்கைகளுக்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து எதிர்க்கட்சிகள் கலந்துரையாடியுள்ளன.

எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தலைமையில் இடம்பெற்ற இச்சந்திப்பில் ஜி.எல்.பீரிஸ், ரவூப் ஹக்கீம், எம்.ஏ.சுமந்திரன், ரிஷாட்பதியுதீன், பழனி திகம்பரம், நாலக கொடஹேவா, சந்திம வீரக்கொடி, லக்ஷ்மன் கிரியெல்ல, ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் கலந்து கொண்டனர்.

அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ள ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

பகிரவும்...