Main Menu

சஜித்திற்கு கொரோனா உறுதி – நாடாளுமன்றில் தொடர்பில் இருந்தவர்கள் குறித்து சிசிரிவி மூலம் ஆராய்வு

திர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில்,  நாடாளுமன்றத்தில் அவருடன் நெருங்கி பழகியவர்கள் குறித்து சிசிரிவி கெமராக்களில் கண்காணிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனூடாக அவருடன் நெருங்கி பழகியவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.

தனக்கும் தன்னுடைய மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டிருந்தார்.

அதனடிப்படையில் அவர்கள் இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தம்மை சுயதனிமைப்படுத்திக்கொண்டுள்ளதுடன் பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளவுள்ளதாகவும் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...