Main Menu

கொரோனா தாக்கம் : சென்னையில் இருந்து செல்லும் விமானங்கள் இரத்து!

கொரோனா அச்சம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து செல்லும் 10 விமானங்களை விமான நிறுவனங்கள் இரத்து செய்துள்ளன.

இதன்படி குவைட்,  ஹொங்கொங் செல்லும் 10 விமானங்களை ஏர் இந்தியா, இண்டிகோ, குவைத் ஏர்வேஸ்,  கதே பசிபிக் ஆகிய நிறுவனங்கள் இரத்து செய்துள்ளன.

அத்துடன் கொரோனா அச்சம் காரணமாக குவைத்,  ஹொங்கொங், இத்தாலி, ஈரான் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு வந்து செல்லும் விமானங்களின் எண்ணிக்கை 40 சதவீதம் குறைந்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

சீனாவின் வுகான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய ஆட்கொல்லி கொரோனா வைரஸ் சீனா மட்டுமின்றி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.

சீனாவில் மிகப்பெரிய மனித பேரழிவை ஏற்படுத்தி உள்ள இந்த நோய்  சீனாவுக்கு வெளியே சுமார் 90 நாடுகளில் பரவி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...