Main Menu

கொரோனா தடுப்பு முகாம்களில் இருந்து 311 பேர் வெளியேறினர்

கொரோனா தொற்றுக்குள்ளாகி வெளிநாடுகளில் இருந்து வருகைதந்து இலங்கையில் தனிமைப்படுத்தல் நிலையங்களில் சிகிச்சை பெற்றுவந்த முதலாவது குழு அந்தந்த தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து வெளியேறியுள்ளனர்.

வெளிநாடுகளில் இருந்து வருகைதந்த 311 பேர் அடங்கிய குழுவொன்றே இவ்வாறு தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் இருந்து வெளியேறியதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க தெரிவித்தார்.

இத்தாலி, ஈரான் மற்றும் தென்கொரியாவில் இருந்து வருகைதந்தவர்களே இவ்வாறு சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளனர்.

கந்தகாடு தடுப்பு முகாமிலிருந்து 108 பேரும், புனானை தடுப்பு முகாமில் இருந்து 203 பேரும் இவ்வாறு வெளியேறியுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இவர்கள் கண்டி, மாத்தறை மற்றும் காலி ஆகிய இடங்களுக்கு இராணுவத்தினரின் தலையீட்டில் விசேட பஸ் வண்டிகளில் அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.

அவர்களுக்கு தேவையான மதிய உணவு உள்ளிட்ட உணவு பொருட்களை பெற்றுக்கொடுக்க உள்ளதாகவும் இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.

பகிரவும்...