Main Menu

கொரோனா கட்டுப்பாடுகளைத் தளர்த்த தீர்மானம் – பிரான்ஸ் அரசாங்கம்

பிரான்ஸில் இவ்வார இறுதி முதல் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்த தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி இமானுவெல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

நேற்று (செவ்வாய்க்கிழமை) நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தி ஜனாதிபதி, அத்தியாவசியமற்ற பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களை திறக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் டிசம்பர் 15 ஆம் திகதி முதல் மேலும் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் மதுபானசாலைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 20 ஆம் திகதி வரை மூடப்பட்டிருக்கும் எனவும் பிரான்ஸ் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பகிரவும்...