Main Menu

கூந்தலை சுத்தமாக பராமரிக்கும் ஆரோக்கிய முறை

கூந்தலை சுத்தமாக பராமரித்தால் பொடுகு, பேன், கூந்தல் உதிர்தல் போன்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம். கூந்தலை ஆரோக்கியமாக பராமரிக்கும் முறைகளை அறிந்து கொள்ளலாம்.

கூந்தலை சுத்தமாக பராமரிக்கும் ஆரோக்கிய முறை
பாசிப்பயிறு அரைத்து தலைமுடியில் தேய்த்துக் குளிப்பது தலைமுடிக்கு நல்ல ஊட்டச்சத்து.

வாரத்திற்கு ஒரு முறை அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறை முட்டையின் வெள்ளைக்கரு, தயிர், பாசிப்பயிறு மூன்றையும் சேர்த்துத் தடவி வந்தால் தலைமுடிக்குத் தேவையான சத்துக்கள் கிடைப்பதுடன், தலைமுடி நன்கு பளபளப்பாக இருக்கும்.

வேப்பிலை, துளசி, புதினா மூன்றையும் நன்கு அரைத்து தலையில் பேக் போட்டு அரை மணி நேரம் ஊற வைத்துக் குளித்தால் பேன் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

வால்மிளகை பாலில் ஊற வைத்து நன்கு அரைத்து அதை தலையில் தடவி 15 நிமிடங்கள் ஊற வைத்து அலசினால் பொடுகுத் தொல்லை போய்விடும்.

மருதாணி, டீ டிகாஷன், எலுமிச்சைச் சாறு மூன்றையும் தலையில் தடவி அரை மணி நேரம் ஊற வைத்துக் குளித்தால், உடல் சூடு தணிவதுடன் முடிக்கும் நல்ல வலு கிடைக்கும்.

வெயில் காலங்களில் முடி வறண்டு காணப்படும். அதைத் தவிர்க்க செம்பருத்தி இலை, வெந்தயம், கறுப்பு உளுந்து, தயிர், எலுமிச்சை சாறு எல்லாவற்றையும் தேவையான அளவில் அரைத்து தலையில் தேய்த்து 15 நிமிடங்கள் ஊற வைத்த பின்னர் குளிக்க வேண்டும். இதனால் முடி உலர்ந்து போகாமல் இருப்பதோடு பொடுகுத் தொல்லை, நுனி முடியில் வெடிப்பு ஏற்படுதல் என எல்லா முடி பிரச்சினைகளையும் தவிர்க்கலாம்.

தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், ஆலிவ் எண்ணெய் மூன்றையும் 4 டீஸ்பூன் அளவு எடுத்து மிதமாக சூடாக்கி தலையின் முடிக் கால்களில் விரல் நுனியால் நன்கு தேய்த்த பின்னர் வெந்நீரில் டவலை நனைத்து தலையைச் சுற்றிக் கட்டினால் கூந்தல் வறட்சியின்றி காணப்படுவதோடு, முடியும் செழித்து வளரும்.

கோடைக்காலங்களில் தலை சருமம் வறண்டு காணப்படுபவர்கள் வால்மிளகு, வெந்தயம் (4:2) என்ற விகிதத்தில் இரண்டையும் பசும்பாலில் ஊற வைத்து இதனுடன் கசகசாவையும் கலந்து அரைத்து தலையில் ஊற வைத்து அரைமணி நேரம் கழித்து குளிக்க, கூந்தல் சாஃப்ட்டாக மாறும்.

பகிரவும்...