Main Menu

கியூபெக்கின் நீண்டகால பராமரிப்பு இல்லங்களை விட்டு வெளியேறும் இராணுவம்!

கியூபெக்கின் நீண்டகால பராமரிப்பு இல்லங்களை விட்டு கனேடிய இராணுவம் வெளியேறவுள்ள நிலையில், அந்த இடத்தினை நிரப்புவதற்கு செஞ்சிலுவை சங்கம் தன்னார்வலர்கள் பயிற்சி அளிக்கப்படுகின்றார்.

தொற்றுநோய் பரவ ஆரம்பித்த கால கட்டத்தில் ஊழியர்கள் பற்றாக்குறையினால் கனேடிய ஆயுதப்படைகள் கியூபெக்கின் நீண்டகால பராமரிப்பு இல்லங்களுக்கு வரவழைக்கப்பட்டன.

இந்தநிலையில் அவர்கள் இன்றுடன் (வெள்ளிக்கிழமை) மாகாணத்தின் நீண்டகால பராமரிப்பு இல்லங்களில் இருந்து கட்டம் கட்டமாக வெளியேறுகின்றனர்.

கனடிய செஞ்சிலுவைச் சங்கத்திற்கு வழிவகை செய்ய இராணுவம் ஏற்கனவே தயாராகி வருகிறது. இது ஜூலை 6ஆம் திகதி முதல் படிப்படியாக வீரர்களை மாற்றும்.

இருப்பினும், அந்த திகதிக்குள், 1,000 செஞ்சிலுவை சங்க ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் அந்த குடியிருப்புகளில் பணியாற்றத் தயாராக இருக்க மாட்டார்கள் என்று அந்த நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கார்ல் போயிஸ்வர்ட் தெரிவித்துள்ளார்.

ஆட்சேர்ப்பு இன்னும் நடைபெற்று வருகிறது. மேலும் சிறப்பாக நடந்து வருகிறது என்று போயிஸ்வர்ட் கூறினார்.

விண்ணப்பதாரர்களுக்கு மருத்துவ அனுபவம் தேவையில்லை என்றும் பணியமர்த்தப்படுவதற்கு முன்பு பயிற்சி வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

கியூபெக் தினசரி கொவிட்-19 தரவை வெளியிடுவதை அதன் இணையதளத்தில் நிறுத்துகிறது. இதற்கு பதிலாக சேவை உதவியாளர், நோயாளி பராமரிப்பு உதவியாளர் அல்லது ஒழுங்கான மற்றும் நிர்வாக பணியாளர் போன்ற வேலைகளை கோரும் பதிவொன்றினை பதிவேற்றியுள்ளது.

ஆட்சேர்ப்பு செய்யப்பட்டவர்கள் ஒரு இல்லத்தில் குறைந்தபட்சம் நான்கு வாரங்கள் பணிபுரிய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...