Main Menu

காவற்துறையிளர் மீது இஸ்லாமியப் பயங்கரவாதத் தாக்குதல்!!

நேற்று காவற்துறையினர் மீது இஸ்லாமியப் பயங்கரவாதத் தாக்குதலை ஒரு நபர் மேற்கொண்டுள்ளான்.இந்தச் சம்பவம் கான் (CANNES) நகரில் நடந்துள்ளது. CANNES நகரின் காவல் நிலையத்திற்கு முன்னர் இன்று அதிகாலை 6h40 மணியளவில் நான்கு காவற்துறையினர் சிற்றுந்தினுள் இருந்துள்ளனர். இதில் மூன்று காவற்துறை வீரர்களும், அவர்களின் அணித் தலைவரும் இருந்துள்ளனர். இவர்களிடம் வழி கேட்பது போல் சென்ற, நபரொருவன், காவற்துறையினர் கண்ணாடியைத் திறந்தவுடன், திடீரெனக் கத்தியெடுத்து அந்தக் காவற்துறை வீரரின் நெஞ்சில் குத்தி உள்ளான். காவற்துறை வீரர் அணிந்திருந்த, துப்பாக்கிக் குண்டுத் தடுப்பு அங்கி, கத்திக் குத்தில் இருந்து அவரைக் காப்பாற்றி உள்ளது. உடனடியாக மற்றைய பக்கம் சென்று அணித்தலைவரின் (cheffe d’équipage)) முகத்திலும் கழுத்திலும் குத்த முயன்ற போது, அருகிலிருந்த காவற்துறை வீரர் இவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளார். காயங்களுடன் கைது செய்யப்பட்ட நபர், அல்லாவின் பெயரால் தாக்குதல் நடாத்தியதாகக் கூறியுள்ளான். காவற்துறையினர் இது ஒரு பயங்கரவாதத் தாக்குதல் என்றே தெரிவித்துள்ளனர்.

பகிரவும்...