Main Menu

கம்மன் பிலவுக்கு எதிரான பிரேரனை குறித்து கூட்டமைப்பின் அறிவிப்பு

எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து உடனடியாக தீர்மானம் எடுக்கப்படாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும்போதே, கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் இதனை தெரிவித்தார்.

இந்த பிரேரணை மீதான விவாதத்தைக் கருத்திற்கொண்டு, வாக்கெடுப்பு நடத்தப்படும் தினத்திலேயே இதுகுறித்த தீர்மானம் எடுக்கப்படும் என சுமந்திரன் கூறினார்.

எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்து உதய கம்மன்பிலவுக்கு எதிராக எதிர்க்கட்சி கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை இந்த மாதம் 19ஆம் திகதி நாடாளுமன்றில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

மேலும் குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு 20ஆம் திகதி நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...