Main Menu

கம்பஹாவில் ஒரேநாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று!

நாட்டில் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட 3 ஆயிரத்து 306 கொரோனா நோயாளர்களில் அதிக எண்ணிக்கையிலானோர் கம்பஹா மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர்

அதனடிப்படையில் இம்மாவட்டத்தில் ஆயிரத்து 4 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அந்த மாவட்டத்தில் இதுவரையில், 35 ஆயிரத்து 340 பேருக்கு தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேநேரம், கொழும்பு மாவட்டத்தில் நேற்று 501 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, இம்மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 50 ஆயிரத்து 884 ஆக அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...