Main Menu

கனடாவில் இதுவரை இல்லாத அளவு நாளொன்றுக்கான பாதிப்பு எண்ணிக்கை பதிவானது!

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், இதுவரை இல்லாத அளவு நாளொன்றுக்கான பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், ஏழாயிரத்து 861பேர் பாதிக்கப்பட்டதோடு, 98பேர் உயிரிழந்துள்ளனர்.

கனடாவில் வைரஸ் தொற்று பரவியதிலிருந்து பதிவான நாளொன்றுக்கான அதிகப்பட்ச பாதிப்பு எண்ணிக்கை இதுவாகும்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 29ஆவது நாடாக விளங்கும் கனடாவில், மொத்தமாக மூன்று இலட்சத்து 78ஆயிரத்து 139பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 12 ஆயிரத்து 130பேர் உயிரிழந்துள்ளனர்

மேலும், 66ஆயிரத்து 037பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 492பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் இரண்டு இலட்சத்து 99ஆயிரத்து 972பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.

பகிரவும்...