Main Menu

கட்சியிலிருந்து தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டார் ரஞ்சன்

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் கட்சி உறுப்புரிமையை தற்காலிகமாக இடைநிறுத்த ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் அகில விராஜ் காரியவசம் இன்று (செவ்வாய்க்கிழைமை) இதனை தெரிவித்துள்ளார்.

ரஞ்சன் ராமநாயக்க மாதிவெலயில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் வைத்து கடந்த நான்காம் திகதி கைது செய்யப்பட்டார்.

இதன்போது பல இறுவட்டுக்கள் அவரின் இல்லத்தில் இருந்து மீட்கப்பட்டன. இதனையடுத்து முன்னைய ஆட்சியின்போது குற்றப்புலனாய்வு திணைக்கள முன்னாள் பணிப்பாளர் சானி அபேசேகர, நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா  உள்ளிட்ட பலருடன் கலந்துரையாடிய விடயங்கள் தொடர்பான குரல் பதிவுகள் அனைத்தும் பகிரங்கமாகியிருந்தன.

அதன் பின்னர் அவர் மீது தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

எனினும் அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் மற்றும் மேலும் பல தொலைபேசி குரல் பதிவுகளும் தொடர்ச்சியாக வெளிவந்தவண்ணமே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...