Main Menu

கடும் எதிர்ப்புகளைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்கள் மீதான தடையினை நீக்கியது அரசாங்கம்

இலங்கையில் சமூக வலைத்தளங்கள் மீது விதிக்கப்பட்டிருந்த தற்காலிகத் தடை நீக்கப்பட்டுள்ளது.

இன்று(ஞாயிற்றுக்கிழமை) அரசாங்கத்திற்கு தமது அதிருப்தியை தெரிவிக்க நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்த ஆர்ப்பாட்டங்கள் அரசியல் கட்சிகளின் வழிநடத்தல் இன்றி நடத்தப்படவிருந்தன.

நேற்று நள்ளிரவு முதல் பேஸ்புக், வாட்ஸ்ஆப், YouTube உள்ளிட்ட சில சமூக வலைத்தளங்கள் இலங்கையில் முடக்கப்பட்டன.

இந்தநிலையில் சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை இலங்கை நேரப்படி மாலை 3.30 மணி முதல் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் தொழிநுட்ப அமைச்சு தெரிவித்துள்ளது.

பகிரவும்...