Main Menu

கடுமையான நேரத்தில் நாடு உங்களுடன் இருக்கும் – மோடி

கடுமையான நேரத்தில் நாடு உங்களுடன் இருக்கும் என பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

மணிப்பூர் நீர் வழங்கல் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவை காணொளி மூலமாக ஆரம்பித்து வைத்த அவர் உரையாற்றும்போதே மேற்படி குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “ வடகிழக்கு இந்தியா இயற்கை கலாசார பன்முகத்தன்மை மற்றும் கலாசார வலிமையின் அடையாளமாக திகழ்கிறது.

நவீன கட்டமைப்பை நிறுவியதன் மூலம் தற்போதை சூழ்நிலையில் சுற்றுலா அதிக அளவில் வலிமை பெற்றுள்ளது. மணிப்பூர் உள்ளிட்ட வடகிழக்கின் சுற்றுலாத்திறன் இன்னும் முழுவதுமாக கண்டுபிடிக்கப்படவில்லை.

வடகிழக்கு இந்தியா தற்போது கொரோனா,  வெள்ளம் ஆகிய இரண்டு சவால்களை எதிர்கொண்டு வருகிறது. கனமழையால் மிகப்பெரிய சேதம் ஏற்பட்டுள்ளது. ஏராளமான மக்கள் உயிர்களை இழந்துள்ளனர். அதிகமானோர் இடம் பெயர்ந்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்காகவும் எனது அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். கடுமையான நேரத்தில் நாடு உங்களுடன் இருக்கும் என்பதை உறுதிபட தெரிவித்துக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...