Main Menu

கடந்த 3 தினங்களாக சுற்றுலா பயணிகளின் வருகையில் வீழ்ச்சி!

கடந்த 3 தினங்களாக சுற்றுலா பயணிகளின் வருகையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தம்மிக்கா விஜேசிங்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் நாளொன்றிற்கு சுமார் 4 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை தந்திருந்த நிலையில், கடந்த 3 நாட்களாக ஆயிரத்து 300 சுற்றுலா பயணிகளே வருகை தந்துள்ளனர்.

இதன்காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு இடையூறு ஏற்படும் வகையில், வீதி போக்குவரத்துக்கு தடை ஏற்படுத்தாமல் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்குமாறும் அவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பகிரவும்...