Main Menu

கடந்த 24 மணித்தியாலங்களில் கண்டியிலேயே அதிக கொரோனா நோயாளர்கள் பதிவு!

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் கண்டறியப்பட் 2 ஆயிரத்து 386 கொரோனா நோயாளர்களில் அதிகமானவர்கள் கண்டி மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதிகபட்சமாக 338 நோயாளர்கள் கண்டியில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொரோனா வைரஸைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

கண்டி நகரப் பகுதியிலிருந்தே அதிக எண்ணிக்கையிலான கொரோனா நோயாளர்கள் பதிவாகியுள்ளன  என்றும் மேலும் இரண்டாவது மிக அதிகமானவை மெனிகின்னா பகுதியிலிருந்து பதிவாகியுள்ளன.

இதேநேரம், கொழும்பில் 227 நோயாளர்களும் கம்பஹாவில் 184 நோயாளர்களும் களுத்துறையில் 321 கொரோனா நோயாளர்களும் பதிவாகியுள்ளன.

அதேபோல, நுவரெலியாவில் 228 நோயாளர்களும் மாத்தறையில் 104 நோயாளர்களும் குருநாகலில் 181 நோயாளர்களும் கண்டறியப்பட்டுள்ளன.

பகிரவும்...