Main Menu

ஐ.நா.விவகாரத்தில் ரெலோவும் புளொட்டும் தவறிழைத்துள்ளதாக எம்.ஏ.சுமந்திரன் குற்றச்சாட்டு!

ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு அறிக்கை அனுப்பும் விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளான ரெலோவும் புளொட்டும் தவறிழைத்துள்ளதாக எம்.ஏ.சுமந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனினால் தனியான அறிக்கை ஒன்று ஆவணமாக தயாரிக்கப்பட்டுவரும் நிலையில் அதற்கு மாறான வேறு ஒரு ஏற்பாட்டுக்கும் தாம் இணங்கவில்லை என்றும் கூறினார்.

இந்நிலையில் வேறு ஒரு ஆவணத்தில் கையெழுத்திட்டு ரெலோவும் புளொட்டும் அனுப்பியுள்ளமை பெரும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் எம்.ஏ.சுமந்திரன் கூறினார்.

இரா.சம்பந்தனினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை ஓர் வரைபு என்பதனால் அதில் திருத்தங்களை மேற்கொள்ள முடியும் என்றும் அவற்றினை பேச்சுவார்த்தை மூலம் மேற்கொள்ள முடியும் என்றும் சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.

பகிரவும்...