Main Menu

ஐரோப்பிய நாடுகள் தடை விதிக்க வாய்ப்பு -ஐ.தே.க. எச்சரிக்கை

இலங்கை முறையான பாதையில் பயணிக்காவிட்டால் ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிசலுகை அற்றுப்போகும் அதேவேளை மீன் ஏற்றுமதிக்கு ஐரோப்பிய நாடுகள் தடை விதிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

ஐ.நா. பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை நிவர்த்தி செய்ய ஒரு வருடம் காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இக்காலப்பகுதியில் அரசாங்கம் சிறப்பாக செயற்பட வேண்டும் என்றும் அக்கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறித்த பிரேரணைக்கு ஆதரவளித்த பிரான்ஸ், ஜேர்மனி உள்ளிட்ட பல நாடுகளின் ஆதரவை பெற்றுக்கொள்ள கடந்த ஆட்சியில் ரணில் விக்ரமசிங்க சிறந்த இராஜதந்திர நகர்வுகளை முன்னெடுத்திருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்தோடு நல்லாட்சி அரசாங்கத்தில் ஐரோப்பாவினால் இலங்கையின் மீன் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கிக் கொள்வதற்கும் ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்திருந்தார் என்றும் வஜிர அபேவர்தன குறிப்பிட்டார்.

பகிரவும்...