Main Menu

5ம் ஆண்டு நினைவு தினம் – அமரர். நாகலிங்கம் தவமணிநாயகம் (20/01/2022)

மேடை நாடக ஒலி அமைப்பாளரும்முன்னாள் காங்கேசன்துறை சிமெந்து கூட்டுஸ்தாபன மின்சாரபகுதி முகாமையாளரும், தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தான நிர்வாகசபை மூத்த உறுப்பினரும் மல்லாகம் கோணப்புல ஞானபைரவர் கோவில் தலைவருமான அமரர் நாகலிங்கம் தவமணிநாயகம் அவர்களின் ஐந்தாவது ஆண்டு நினைவு தினம் 20 ஆம் திகதி ஜனவரி மாதம் வியாழக்கிழமை அனுஷ்டிக்க படுகிறது.

அமரர் நாகலிங்கம் தவமணிநாயகம் அவர்களை அன்பு மனைவி திலகமணி (மல்லாகம்), அன்பு பிள்ளைகள் கருணாகரன் (நோர்வே), தயானந்தன் (மல்லாகம்), இரவீந்திரன் (பிரான்ஸ்), யமுனா (மல்லாகம்), மருமக்கள் சாரதவல்லி (நோர்வே) , றோகினி (மல்லாகம்), கேதீஸ்வரி (பிரான்ஸ்), சண்முகராஜா (மல்லாகம்), பேரப்பிள்ளைகள் கோபிசாந்,மோகவி, ரவிசாந், சங்கவி, ஜாதவி, சாம்பவி சம்புஜன், மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் அன்னாரை இவ்வேளையில் நினைவுகூருகின்றார்கள்.

ஐந்தாவது ஆண்டில் நினைவு கூரப்படும் அமரர் நாகலிங்கம் தவமணிநாயகம் அவர்களை TRT தமிழ் ஒலியில் பணிபுரியும் அன்பு உறவுகள் அனைவரும் நினைவு கூருகின்றனர்.

இன்றைய TRT தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்பு பிள்ளைகள் கருணாகரன், தயானந்தன், ரவீந்திரன், யமுனா,

இவர்களுக்கு எங்கள் இதயபூர்வமான நன்றிகள்.

பகிரவும்...