Main Menu

ஏனைய நாடுகளுடனான இலங்கையின் உறவு மோசமடைந்துவிட்டது – மக்கள் விடுதலை முன்னணி

நாட்டின் கடன் தரமதிப்பீடுகள் தொடர்ச்சியாகக் குறைக்கப்படுவதால் முதலீட்டாளர்கள் ஊக்கமிழந்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.

சர்வதேச தரப்படுத்தல் முகவர் நிலையங்கள் சுயாதீனமானவை எனவும் முதலீட்டாளர்கள் தீர்மானங்களை எடுப்பதற்கு அவற்றின் மதிப்பீடுகள் மிகவும் முக்கியமானவை எனவும் அவர் கூறினார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய ஹரினி அமரசூரிய, நாடு அந்நிய செலாவணி நெருக்கடிக்கு உள்ளாகி வருவதால் இறக்குமதி செலவுகள் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதியின் விவசாயக் கொள்கை பேரழிவாக மாறியுள்ள காரணத்தினால் அடுத்த சில மாதங்களில், அரசாங்கம் பெரிய அளவிலான உணவை இறக்குமதி செய்ய வேண்டியிருக்கும் என்றும் குறிப்பிட்டார்.

இருப்பினும் ஏனைய நாடுகளுடனான இலங்கையின் உறவு மோசமடைந்துள்ளதாகவும் அதுவும் நாட்டுக்கு பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் ஹரினி அமரசூரிய சுட்டிக்காட்டினார்.

பகிரவும்...