Main Menu

எந்த தேர்தலையும் சந்திக்க தயார் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எந்த தேர்தலையும் சந்திக்க தயாராக உள்ளதென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது பாரியார் ஸ்ரீராந்தி ராஜபக்ஷ ஆகியோர் இன்று (19) நுவரெலிய சீதாஎலிய ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் விசேட வழிபாட்டில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார். 

சீதாஎலிய ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த தேர் திருவிழாவை முன்னிட்டு ஆலயத்தின் பரிபாலன சபை தலைவரும் அமைச்சருமாகிய வீ. ராதாகிருஷ்ணனின் அழைப்பிற்கினங்க அங்கு சென்ற முன்னாள் ஜனாதிபதியுடன் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.பி. ரத்நாயக உட்பட பலர் சென்றிருந்தனர். 

மேலும் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் போது ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை உரிய நேரத்தில் அறிவிப்போம் எனவும் முன்னாள் ஜனாதிபதி அங்கு தெரிவித்தார். 

பகிரவும்...