Main Menu

எதிர்க்கட்சி தலைவரை சந்தித்த இரு தூதுவர்கள்

இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் ஜோன் டுனவாட், எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.

விஜேரமாவில் அமைந்துள்ள எதிர்க்கட்சி தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று காலை இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக எதிர்க்கட்சி அலுவலகம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

இதன்பாது உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற பயங்கராவத தாக்குதல்கள் தொடர்பில் நெதர்லாந்து தூதுவர் எதிர்க்கட்சி தலைவரிடம் தமது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதல்களில் நெதர்லாந்து பிரஜைகளும் உயிரிழந்துள்ள நிலையில், அது தொடர்பில் எதிர்க்கட்சி தலைவரும் நெதர்லாந்து தூதுவரிடம் தமது வருத்தத்தை தெரிவித்துள்ளதாக எதிர்க்கட்சி அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கைக்கான ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் தூதுவர் அஹமட் இப்ராஹிம் அல்முல்லாவும் இன்று எதிர்க்கட்சி தலைவரை சந்தித்துள்ளார்.

பகிரவும்...