Main Menu

ஊடகவியலாளர் மீது தாக்குதல்- விசாரணையை ஆரம்பித்துள்ள மனிதவுரிமை ஆணைக்குழு

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு தலைமை பொலிஸ் பரிசோதகரிடமும் 59ஆவது படைப்பிரிவின் கட்டளை தளபதியிடமும் அறிக்கை கோரப்பட்டுள்ளதாக இலங்கை மனிதவுரிமை ஆணைக்குழுவின் வட.பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் இணைப்பாளர் த.கனகராஜ் மேலும் கூறியுள்ளதாவது, “முள்ளிவாய்க்கால் பகுதியில் இராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதலில் சுயாதீன ஊடகவியலாளரான விஸ்வச்சந்திரன் என்ற ஊடகவியலாளர் தாக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த செய்திகளை அடிப்படையாக கொண்டு, 1996 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிரிவு 14 கீழ் சொந்த பிரேரணையாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதனடிப்படையில் முல்லைத்தீவு தலைமைபொலிஸ் பரிசோதகரிடமும் 59ஆவது படைப்பிரிவின் கட்டளை தளபதியிடமும் சம்பவம் தொடர்பான அறிக்கை கோரப்பட்டன.

மேலும் காயமடைந்த ஊடகவியலாளரிடமும் வாக்குமூலம் பெறுவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...